dalitiyam

mardi 25 août 2009

பிரான்சில் நடைபெற்ற முதலாவது தலித் மாநாட்டைத்தொடர்ந்து,இரண்டாவது தலித் மாநாடு லண்டனிலும் சிறப்புடனும், பல விவாதங்களுடனும் நடந்து முடிந்தது. கடந்த 16ஆம்17ஆம் திகதிகளில் லண்டனிலுள்ள LEYTONSTON எனும் சுரங்கப்பாதை புகையிரத நிலையத்திற்கு அருகாமையிலுள்ள QUACKERS HOUSE எனும் மண்டபத்தில் மாநாடு நடைபெற்றது.


ஏற்கனவே தயாரித்த நிகழ்ச்சிநிரலில் சில மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டது. இலங்கையிலிருந்து அழைக்கப்பட்ட புதியஜனநாயக் கட்சி உறுப்பினரான தோழர் ந.ரவீந்திரனும் இந்தியாவிலிருந்து அழைக்கப்பட்ட அ.மார்க்ஸ் அவர்களும் நேரடியாகக் கலந்து கொள்ளமுடியாது போனது. இருப்பினும் தோழர் ரவீந்திரனும், அ. மார்க்சும் காத்திரமான கட்டுரைகளை மாநாட்டுக்கு அனுப்பிவைத்தனர். குறிப்பாக அ.மார்க்ஸ் அவர்கள் கட்டுரையாகவும் ஒலி வடிவத்திலும் தனது கட்டுரையை அனுப்பிவைத்தார்.

london_conference

முதல் நாள் கலந்து கொண்டவர்களின் சுய அறிமுகத்துடன் நிகழ்ச்சி ஆரம்பமானது. பிரான்சில் நடைபெற்ற முதலாவது மாநாட்டில் கலந்து கொண்ட தோழர் பரா மாஸ்டர் அவர்கள் இரண்டாவது மாநாடு நடைபெறும்போது எம்மை விட்டுப் பிரிந்துவிட்டார். அவரை நினைவுகொண்டும் கடந்த காலத்தில் தலித் சமூக விடுதலைப்போராட்டத்தில் களப்பலியானவர்களையும் மனதில் இருத்தி சில நிமிட நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து இலங்கைத் தலித் சமூக விடுதலை முன்னணியின் தலைவர் தேவதாசன் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். பிற்பாடு அவரின் தலைமையிலேயே தோழர் ந.ரவீந்திரனின் கட்டுரையை ‘மூன்றாவது மனிதன்’ சஞ்சிகையின் ஆசிரியர் எம்.பௌசர் அவர்கள் வாசித்தார். அதைத்தொடர்ந்து புஸ்பராணி அவர்கள் சாதியமும் பெண்களும் எனும் தலைப்பில் பேசினார்.

london_conference

தோழர் ரவிந்திரன் அவர்கள் இலங்கையில் சாதியம் எவ்வாறு காப்பாற்றப்பட்டு வருகிறது என்பதை பல ஆதாரங்களுடன் தனது கட்டுரையில் வெளிப்படுத்தியிருந்தார். யுத்த சூழலில் மறைந்து உறைந்து நீறுபூத்துக்

dimanche 23 août 2009

கற்சுறா

கற்சுறா  

1983இல் கட்டவிழ்த்து விட்ட அன்றைய சிறீலங்கா அரசின் வன்முறை ஆயிரக்கணக்கில் ஈழத்தமிழர்களைப் பலியெடுத்தது. போர் என்றால் போர் சமாதானம் என்றாலும் போர். என்ற இனவாதி ஜே.ஆர். ஜயவர்த்தனவின் வாக்குமூலம் தமிழர்கள் என்பதை முற்றாக நிராகரித்தது. ஒரு அரச இராணுவம் என்னவகையில் தனது மக்கள் மீது வன்முறையைப் பிரையோகிக் முடியுமோ அதற்கும் மேலால் இனவாதி ஜே.ஆர் ஜெயவர்த்தனாவின் அரச இராணுவம் செய்து காட்டியது.



கொம்பு சீவப்பட்ட சிங்களக் காடையர்கள் அரச இராணுவத்திற்கு ஒத்தாசை வழங்கினார்கள். 1983 இலங்கையே கொழுந்து விட்டு எரிவது போல் இருந்தது. வெலிக்கடையில் கொல்லப்பட்ட 53 பேர்களிண் பெயரும் இலங்கை தமிழ் வானொலிச் செய்தியில் வாசிக்கப்பட்டபொழுது முழு இலங்கையும் இருள்
கவ்வியது.  நாம் ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட வன்முறையாளர்களோ வன்முறை மீது கொண்ட மனநோயாளிகளோ அல்ல என்று நீதி மன்றத்தில் கூக்குரலிட்ட தங்கத்துரை, எனக்கு மரணதண்டனை தரும் போது எனது கண்ணை யாருக்காவது தானமாகக் கொடுங்கள் அப்போது எனது கண் தமிழீழத்தைப் பார்க்கும் என்று சொன்ன குட்டிமணி தேவன் ஜெகன் என்று 53 பெயர்கள் நமக்குப் பாடமாகின. இந்தப் படுகொலை நடந்து 25 வருடங்கள் ஆகிவிட்டும் நமக்கு அந்தப் பெயர்கள் இன்றுவரை மனதில் இருக்கின்றது. அந்தப் படுகோர நிகழ்வினை கோரம் கொண்டு எதிர்க்க முடிகிறது. 25 வருடங்கள் காவிக் கொண்டுவர முடிகிறது. இந்தச் சாத்தியங்களை நாம் எப்படி விளங்கிக் கொள்கிறோம் என்பது முக்கியம்.

தலித் தகவல்

தமிழ் சமூகம் எந்த உலகத்தில் வாழ்ந்தாலும் சாதி ஒடுக்குமுறைகள் அல்லது சாதி ஏற்றத்தாழ்வு மோதல்கள் இடம் பெறுகிற போதெல்லாம் அது ஒரு குழு மோதல் என்ற வகையில் பிரச்சனைகள் குறுக்கப்பட்டு உடனேயே மூடி மறைக்கப்படுகிறது. அதற்கு மாறாக அதன் அடிப்படைத் தன்மைகளை ஆய்வு செய்து அதன் அடி நாதமாகிய சாதிய அமைப்பு வடிவத்தை அழித்தொழிக்க யாரும் முன்வருவதாக இல்லை. இந்த வகையில் அண்மையில் சுவிஸ் நாட்டிலும் கூட சாதி மோதல் நடைபெற்றதாக சில தகவல்கள் கசிந்துள்ளது. தமிழன் விமானம் ஏறும்போதே உடுப்பதற்கு உடையும் உண்ண உணவும் கொண்டு போகிறானோ இல்லையோ கலாச்சாரத்தின் பேராலும் மதத்தின் பேராலும் சாதியை மட்டும் தூக்கிச் சென்றுவிடுகின்றான். அதன்மூலம் சாதி ஒடுக்குமுறையை செய்ய முடியாவிட்டாலும் சாதியை இழிவு படுத்தும் சொற்கள் செயல்கள் தாராளமாகவே கடைப்பிடித்து வருகின்றனர்.
அவர்களது அதிகாரம் அல்லாத நாடுகளிலேயே சாதியை தக்கவைப்பதில் தீவிரம் காட்டும் தமிழன் சொந்தமண்ணில் எப்படி நடந்து கொள்வான் என்பதை இலகுவாக புரிந்து கொள்ளலாம்.

வேலணை என்னும் கிராமத்தில் ஒவ்வொரு சாதியும் ஒவ்வொரு குறிச்சிவாரியாகவே வாழ்ந்து வருகின்றனர். எத்தனையோ யுத்தம் எத்தனையோ இடப் பெயர்வு நிகழ்ந்தாலும் சாதிகள் மட்டும் எந்தக் குறிச்சியும் மாறாமல் அப்படியே வாழ்ந்து வருகிறது. வேலணையில் தலித்துக்கள் வாழும் பகுதியில் உணவு சமைக்க ஒரு தண்ணீரும் குளிப்பதற்கு ஒரு இடமும் குடிக்கும் தண்ணீர் எடுக்க ஓர் இடமுமாக அலைக்கழிந்த வாழ்க்கையை நீண்ட காலமாகவே வாழ்ந்து வருகின்றனர். சமைக்கும் தண்ணீர் தமது வீட்டுக் கிணறுகளில் இருந்து பெற்றுக் கொள்கின்றனர். அதுவும் கடும் கோடைக்காலத்தில் கிணற்றுத் தண்ணீர் வற்றிவிடும். குளிப்பதற்கும் உடுப்புத் தோய்ப்பதற்கும் கடற்கரையை நோக்கி சென்று அவர்களுக்கென ஒதுக்கப்பட்டிருக்கும் பொதுக்கிணத்தில் அத்தேவையை பூர்த்தி செய்து கொள்வார்கள். குடிப்பதற்கான தண்ணீர் அதில் இருந்து முன்னூறு மீற்றர் தூரத்தில் நல்ல தண்ணீர் கிணறு என அழைக்கப்படும் (இதுவும் இச்சாதிக்கென ஒதுக்கப்பட்டது.) இடத்திற்கு சென்று பெற்றுக்கொள்கின்றனர்.